Asia's First Genderqueer Pride Parade on Media




ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழா - Asia's First Genderqueer Pride Parade by RJ Naveen Radio Mirchi

ஆண், பெண், திருநர் தவிர்த்து இருபதிற்கும் மேற்பட்ட பாலினங்கள் உலகில் உள்ளன.’ புருவங்களை உயர வைக்கும் இச்செய்தியை கண்டும் காணாமல் எவராலும் சென்றிருக்க முடியாது. ‘ஸ்ருஷ்டி’ என்கிற மாணவர் அமைப்பு மதுரையில் நடத்திய பேரணியில் தான் இடம்பெற்றிருந்தது இந்த வாசகம். வியப்பின் காரணமாகவும், அதனின் விளக்கம் கேட்டும் ‘ஸ்ருஷ்டி’யின் மதுரை நிறுவனர் திரு.கோபிசங்கரைச் சந்தித்தோம்.கல்விக்கும் பாரம்பரியத்திற்கும் பெயர் போன மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் தான் கோபிசங்கர் என்று தெரிந்ததும், அவரது கல்லூரி வளாகத்திலேயே அவருடன் நேர்காணல் கண்டோம்.


கே: ஆண், பெண், திருநர் தவிர்த்து இருபது பாலினங்கள் இருப்பது உண்மையா?
ஆம். பாலினம் என்பது நீங்கள் உங்களை எப்படி கருதிக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. பாலினம் (Gender) என்பது வேறு,  பாலியல் -ஒருங்கினைவு (Sexual Orientation) என்பது வேறு. பொதுவாக, மக்களிடம் ஆண், பெண் பற்றிய விழிப்புணர்வே மேலோங்கி நிற்கிறது. எனினும், சமீபகாலமாக திருநங்கைகள் மீதான வெளிச்சமும் அளப்படியாகவே உள்ளது. அனால், உண்மையில் இருபதிற்கும் மேற்ப்பட்ட பாலினங்கள் உள்ளன. இப்போது இருக்கும் உலகில் இதற்கான விழிப்புணர்வு இன்றியமையாததாகிறது.


கே: அந்த பாலினங்களை பட்டியலிடமுடியுமா?
முடியும்.
அ) பொதுப் பாலினம் ஆண்- Male,பெண்- Female

 ஆ) திருநர் - Transgender
திருநங்கை - Transwomen
திருநம்பி- Transmen

 இ) பால் புதுமையர்- Gender queer
1. பால் நடுநர் - Androgyny
2. முழுனர் - pangender
3. இருனர்- Bigender
4. திரினர்- Trigender
5. பாலிலி -  Agender
6. திருனடுனர் - Neutrois 
7. மறுமாறிகள் - Retransitioners
8. தோற்ற பாலினத்தவர் - Appearance gendered
9. முரண் திருநர் - Transbinary
10. பிறர்பால் உடையணியும் திருநர் - Transcrossdressers
11. இருமை நகர்வு - Binary's bitch
12. எதிர் பாலிலி - Fancy
13. இருமைக்குரியோர் - Epicene
14. இடைபாலினம் -  Intergender
15. மாறுபக்க ஆணியல் - Transmasculine
16. மாறுபக்க பெண்ணியல் - Transfeminine
17. அரைபெண்டிர் - Demi girl
18. அரையாடவர் - Demi guy
19. நம்பி ஈர்ப்பனள் - Girl fags
20. நங்கை ஈர்பனன் - Guy dykes
21. பால் நகர்வோர் - Genderfluid
22. ஆணியல் பெண் - Tomboy
23. பெண்ணன் - Sissy 
24. இருமையின்மை ஆணியல் - Non binary Butch
25. இருமையின்மை பெண்ணியல் - Non binary femme
26. பிறர்பால் உடை அணிபவர் - Cross Dresser
இன்னும் பல...பாலினங்கள் பற்றிய முழுமையான அறிவை மக்கள் கொள்ள வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. இப்பாலினங்கள் குறித்த விழிப்புணர்வே இப்போதைய உடனடித் தேவை.


கே: உடனடித் தேவைக்கு அவசியம் என்ன?
சமுதாய மாற்றங்களுக்குத் தேவையான விதைகள் ஆண்களிடமிருந்தும் பெண்களிடமிருந்தும் மட்டும் வருவது இல்லை. மேற்கூறிய மக்களாலும் மக்களின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்ற முடியும். இதற்கு பல எடுத்துக்காட்டுகளை வரலாறு நமக்குக் காட்டுகிறது. பொதுவான பாலின கட்டமைப்பு விதிமுறைகளிலிருந்து விடுபட்டவர்களாக இருக்கும் இந்த பால் புதுமையினர் உடல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும்  பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் இதை நாம் சமூகவியல் , சட்டம் , மருத்துவம் , மதம்  மற்றும் அறிவியல் என்று பல்வேறு தளம் சார்ந்து அணுகினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். மேலும் இதை பற்றி விரிவான ஆராய்சிகள் 25து வருடங்களுக்கு முன்னரே  ஈவ் செட்விக்  (Eve Sedwick ) என்பவரால் கோணல் கோட்பாடு (queer theory) மற்றும் LGBTQI படிப்பு (Lesbian, Gay, Bisexual, Transgender, Queer & Intersex studies) என்ற ஆராய்ச்சி துறை 15 து  ஐரோப்பிய  மற்றும் அமெரிக்க பல்களைகலகங்களில் பாடமாக துவக்கப்பட்டது. இந்தியாவில் இதை பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லை மேலும் பெரும்பாலான மக்களுக்கு திருனருக்கும் (Transgender) சமபாலீர்புடையோருக்கும் (Gay , Lesbian ) உள்ள வித்தியாசம் கூட தெரிவதில்லை. இந்தியாவில் இன்னும் வெளிப்படையாக இதை பற்றி யாரும் பேசவுமில்லை. இதனால் பாலின அகதிகளாக பலர் வாழ்கின்றனர், உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பாலினம் இருக்கிறது. தனிமனிதனுக்கு தன்னுடைய பாலினத்தை தேர்வு செய்ய உரிமை உள்ளது, தனி நபரின் அந்தரங்க வாழ்கையில் தலையிட எந்த நபருக்கும் , அரசுக்கும் உரிமையில்லை. உலகில் மிக கொடுமையான விஷயம் நாம் வாழும் உடலை நாம் வெறுத்து வாழ்வது  ஒவ்வொரு மாற்றுபாலினத்தவரும் தங்களது உடலை வெறுத்து அன்றாட செத்துபிளைக்கின்றனர் .  உடல், மனம், பாலினம், பாலினஈர்ப்பு  பற்றிய அறிவின்மையே இதற்கு காரணம். இந்த விழா நடைபெறும் பொது கூட மூன்று நபர்கள் தற்கொலை செய்துகொண்டனர், கடந்த 2010 முதல் இந்த மாதம் வரை  இப்படி தங்கள் பாலினத்தை பற்றிய தெளிவில்லாமல், வாழ்வதற்கு போதிய சுதந்திரம் இல்லாமல் ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் தற்கொலை செய்துள்ளனர் இதை இந்திய அரசாங்கமும் கண்டுகோள்ளவில்லை. இப்படி பல பிரச்சனைகளை அடுக்கி கொண்டே போகலாம் மக்களுக்கு இதை பற்றிய விழிப்புணர்வை  தருவதே இந்த பிரச்சனையை  முடிவுக்கு கொண்டுவரும்.


கே:டுரிங் வானவில் விழா என்றால் என்ன?
 ஆலன் டூரின் என்பவரைப் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கி.பி 2500-ஆம் வருடம் நம் மனித சமூகம் எட்டியிருக்க வேண்டிய அதிநவீன வளர்ச்சியினை ஐம்பது எட்டு வருடங்களுக்கு முன்பே கொடுக்க வல்ல ஒரு அதிமேதாவியை நம் அறியாமை கொன்று விட்டது. தத்துவவியலின் விடிவெள்ளி,கணினி அறிவியலின் தந்தை, தர்க்கத்தின் அதிபதி, மறையீட்டியலின் அரசர், செயற்கை நுண்ணறிவின் கடவுள், உயிரின அமைப்பியலின் முன்னோடி என்று பல்துறை அறிவை உள்ளடக்கிய ஒரு அரும் பெரும் மேதாவி.!-அவர் தான் ஆலன் துரிங் (Alan Turing) ஒரு மனிதன் ஆயிரம் வருடம் வாழ்ந்தாலும் சாதிக்க இயலாத விஷயங்களை, நாற்பத்து ஓரு வயதிற்குள் எந்த வாய்ப்புமில்லாமல் சாதித்து காட்டியவர் துரிங். பாலின பாகுபாடு  என்ற ஒரே காரணத்தால் அவரின் தனி சுதந்திரம் பறிக்கப்பட்டு மிக ஆழ்ந்த துயரங்களில் வாழ்ந்த இவரின்   நூற்றாண்டு வருடமிது. அவரை கொன்ற அறியாமை நம் சமூகத்திலிருந்து விலகி விட்டதா? இல்லை.!, இருபத்தியோராம் நூற்றாண்டின் அரிய கண்டுபிடிபாகக் கருதப்படும் கணிணி உலகின் Artificial Intelligenceன் தந்தை டுரிங் . அவர் சமபால் ஈர்ப்புடயவர் என்ற காரணத்தினாலேயே ஆங்கில அரசு அவரைத் தற்கொலை செய்யத் தூண்டியது. துரிங்கை நினைவு  படுத்தும் விதமாக மதுரையின் முதல்  வானவில் திருவிழாவை  "டுரிங் வானவில் திருவிழா "  என்று பெயரிட்டோம்.



கே: ‘ஸ்ருஷ்டி’ அமைப்பு பற்றி?

ஸ்ருஷ்டி என்பது மாற்று பாலினத்தவருக்கான தமிழகத்தின் முதல் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி வட்டமாகும். பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த பிரச்சினைகளை, சமூக பார்வையோடு அணுகி, அனைவருக்கும் இது குறித்த விழிப்புணர்வினை உ ருவாக்குவதே ஸ்ருஷ்டியின் நோக்கமாகும். இதன் தனித்துவம் என்னவெனில், இது முழுக்க முழுக்க மாணவர்களால் நடத்தப்படும் அமைப்பு சாரா, நிறுவனம் சாரா வட்டமாகும்.


கே: இப்போது நடைபெற்ற இந்த வானவில் திருவிழா திருப்தி அளிக்கிறதா?
பெரிய அளவில் திருப்தி அளிக்கிறது. ‘ஸ்ருஷ்டி’ இதை அறிவித்தவுடன் ‘NAZ’ அமைப்பின் நிறுவனர் திருமிகு .அஞ்சலி கோபாலனிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த அங்கீகாரத்தை நங்கள் பெரும் வெகுமதியாகக் கருதுகிறோம். இது முழுக்கவே மாணவர்களால் நடத்தப்படுவதால் மட்டுமே அவர் இசைந்தார். கடந்த 2009-ம் ஆண்டு, தில்லி உயர்நீதிமன்றம் புதுப்பித்த IPC 377-ம் சட்டத் திருத்தம் அவர்களாலேயே சாத்தியம் மற்றும் அஞ்சலி 2005 நோபெல் பரிசுக்காக பரிதிந்துரைக்க பட்டார், 2012 லண்டன் டைம் இவரை உலகின் அதிக செல்வாக்குள்ள பெண் என்று வெளியிட்டது, எய்ட்சால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நாட்டின் முதல் பராமரிப்பகத்தை உருவாகினார் . இவர் தவிர லீனா மணிமேகலை, திருநர் கல்கி சுப்ரமணியம்,ரேவதி, மற்றும் சாரு, கட்டியகாரி நாடகக்குழு  ஸ்ரீஜித் சுந்தரம், ‘சென்னை தோஸ்த்’ அமைப்பினர், ‘நிறங்கள்’ ஆகியோர் எங்களுக்குக் கொடுத்த ஆதரவு எங்களுக்கு முழு திருப்தி அளிக்கிறது.


கே: இதன் எதிர்கால பாய்ச்சல் எவ்வாறு இருக்கும்?
முழு வீச்சாக அமையும். குறிப்பாக, ஊடகங்களின் பங்கு இவ்விஷயத்தில் குறிப்பிடும்படியாக இல்லை. அதை முதலில் நிவர்த்தி செய்ய வேண்டும். காரணம், மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட ஊடகங்களால் மட்டுமே முடியும். இதற்கு முன்பும் பலர் இதைப் பற்றி பேசியிருந்தாலும், அதை இப்பொது முற்றிலும் புதிய பரிணாமத்திற்கு மாற்ற வேண்டிய கடமை இருப்பதாய் உணர்கிறோம். மிகவும் பழமையான பாரம்பரியமான நகரம் என்றழைக்கப்படும் மதுரையிலேயே இத்தகைய வரவேற்பு அமைந்தது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எங்களின் பணி, நாங்கள் எண்ணியது முடியும் வரை தொடரும்: முடிந்த பின்பும் தொடரும்!

ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழா (Asia's First Gender queer fest)
ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழா (Asia's First Gender queer fest)
ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழா (Asia's First Gender queer fest)


ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழா (Asia's First Gender queer fest)
ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழா (Asia's First Gender queer fest)
Elen and Kiran our supporters 

பிங்கியின் பாலின சர்ச்சை © Srishti Madurai.


பன்மையில் ஒருமை பேசும் நம்மில், ஒருவரின் சொந்த உணர்வுகளை மதித்து அவரை அவர் விரும்பும்படி ற்று கொள்ளும் மனநிலையும், பக்குவமும் இருக்கின்றதா?
தனி மனிதனின் பாலின சுதந்திரத்தில் தலையிட யாரிற்கும் உரிமை இல்லை. திறமையும் தகுதியும் வைத்து நிர்ணயிக்க பட வேண்டிய பல விஷயங்களை இன்றும் நமது நாடு பாலினம் மற்றும் ஜாதி, என்ற பல்வேறு காரணங்களை அடிப்படையாக வைத்து பிரிக்கிறது. இதில் பெரும்பாலும் பாதிக்க பட்டவர்கள் விளையாட்டு துறையில் இருக்கும் பெண்களே. சமீபத்தில் மேற்கு வங்கத்தை சார்ந்த வீராங்கனை பிங்கி பிரமானிகின் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு மற்றும் அவரது பாலினம் தொடர்பான சர்ச்சைகள் உலகளாவிய அளவில் பெண் வீராங்கனைகளுக்கு நடக்கும் பல பாலின ரீதியான பாகுபாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.


பிங்கி ஏப்ரல் 10,1986 அன்று பருலியா-வில் சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து தன்னுடைய பதினேழாம் வயதில் தொடங்கி 2007 வரை இந்தியாவிற்காக பல பதக்கங்களையும் பெருமைகளையும் உலக அரங்கில் வென்றவர் . கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பின்கியுடன் வாழ்ந்ததாக கூறப்படும் பெண் அளித்த புகாரின் பெயரில், போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பல அரசியல் உள் நோக்கங்கள் மற்றும் சூழ்சிகள் நிறைந்த பின்கியின் வழக்கை பற்றி தெளிவான எந்த செய்தியையும் காவல் துறை மற்றும் ஊடகங்கள் வெளியிடவில்லை.


பின்கியுடன் வாழ்ந்ததாக கூறப்படும் அந்த பெண் ஒரு குழந்தைக்கு தாயாகி,விவாகரத்தும் பெற்றவர். இவரை பிங்கியின் துணைவர் என்றும்,அவர் பின்கியுடன் மூன்று வருடம் சேர்ந்து வாழ்ந்தவர் என்றும் பல மாறுபட்ட செய்திகள் உள்ளன. பிங்கியின் தந்தை வேறொரு பெண்ணிற்கும் தன் மகளிற்கும் இருக்கும் இந்த உறவை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுதியிருகிறார் , ஆனால் பிங்கி இதையும் மீறி அந்த பெண்ணுடன் வாழ்ந்ததாக பல்வேறு கருத்துகள் நிலவுகிறது.


பிங்கியின் மீது பாலியல் வன்புணர்வு குற்றம் சுமத்திய அந்த பெண்ணை குறித்து பல்வேறு முன்னுக்கு பின் முரணான விளக்கங்களை நாம் கொடுக்கலாம். பிங்கி தன்னுடன் மூன்று வருடம் வாழ்ந்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என்ற கருத்தினை எடுத்து கொண்டால், அந்த பெண்ணை ,பிங்கி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளக்கி இருப்பார் என்ற நிலை வருகின்றது. ஆனால், மூன்று வருடம் வாழ்க்கை துணைவராக வாழ்ந்தார் என்ற பார்வையில், இந்த செயலை நாம் எவ்வாறு பாலியல் வன்புணர்வு என்று எடுத்து கொள்வது? புரிந்துணர்வு இன்றி ஒருவர் இன்னொருவருடன் மூன்று வருடம் வாழ முடியுமா? மேலும், பிங்கி தன்னை வன்புணர்வும் சித்திரவதையையும் செய்தார் என்றால் இத்தனை நாளாக அந்த பெண் ஏன் இந்த விவகாரம் குறித்து பெண்ணுரிமை அமைப்புகளிலோ, இல்லை காவல் துறையிடமோ புகார் செய்யவில்லை ?.


தன் வழக்கு குறித்து எந்த தெளிவான கருத்துமில்லாமல் பிங்கியின் மீது அந்த பெண் புகார் கூறியிருக்கிறார்.

பிங்கி கைதான சில நாட்களில் மார்சிஸ்ட் கட்சியின் பாராளுமன் உறுப்பினரான ஜோதிர்மயின் கணவர அவதார் சிங்க்ஹின் தூண்டுதலால் தான் பிங்கியின் மீது புகார் செய்ததாக அந்த பெண் கூறியுள்ளார். ஏற்க்கனவே அவதார் சிங்க் மீது, பல்வேறு வழக்குகள் உள்ளன. பிங்கியின் நிலத்தினை கையக படுத்தும் பொருட்டே இந் சதி வேலையை நடந்ததாக பல்வேறு ஆதாரங்கள் கூறுகின்றன. இது குறித்து முன்பே, பின்கிகும் , அவதார் சிங்க்ஹிக்கும் பிரச்சனை இருந்திருக்கிறது. ஆனால், நிலத்தை கையகபடுத்தும் பொருட்டு அவதார் சிங்க் ஏன் இத்தகு பழியினை பிங்கி மீது சுமத்தியிருக்க வேண்டும்?.இதில் கவனிக்க வேண்டியது பிங்கி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியான பொது, அவருடன் உறுதுணையாக இருந்தது ஜோதிர்மயி தான்.


இந்த புகார் குறித்து , ஜோதிர்மயியிடம் கேட்டபொழுது, அவர் தம் கணவர மீது சுமத்தப்பட்ட போலியான கருது இது என்று கூறினார்.

பாலின சுதந்திரம்?:
ஒருவர் தாம் விரும்பி ஏற்று தேர்வு செய்த பாலினத்தினை ஏற்றுகொள்ள நம்மில் எத்தனை பேருக்கு பக்குவம் இருக்கிறது? பெரும்பாலும் இல்லை என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும்.

பிங்கி எந்த பாலின,பாலியல் ஒருன்கினைவுடயராக(sexual orientation) இருந்தாலும், அவரின் பாலினத்தை அவர் அடையாலபடுதிகொள்ள முழு உரிமை வேண்டும். எந்த அரசாங்கதிற்கும், ஒருவரின் சொந்த பாலினத்தில் தலையிடும் உரிமை இல்லை. பாலினம் என்பது ஒருவரின் உளரீதியான, உணர்வு ரீதியான விஷயம். அதை, ெளிப்படுத்தி, அனைவரும் அறியும் பொருட்டு அதனை கேள்வி கேட்டு ருவரை சர்ச்சையாக்குவது பாலியல் மற்றும் பாலின விவகாரங்களில் மக்குரிய முதிர்சியின்மையினை மட்டுமே காட்டுகின்றது.


ஒருவரின் செயல் மற்றொருவரின் உணர்வையும் உடலையும் பாதிக்காத வரைக்கும் தனி மனித வாழ்கையும்,பாலினமும் அந்த தனி நபரின் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு உட்பட்டது , இன்றைய மருத்துவ பரிசோதனை , பின்கியை ண் என்று கூறுகின்றது. உயிரியல் பாலினம் தான் அனைத்தையும் தீர்மானிக்கும் என்ற கருத்தினை அடிப்படையாக வைத்து எழுந்த வெளிப்பாடே இது. மேலும் பிங்கிக்கு ஆடவர் பொய்-டையிலிங்க நிலை(male pseudo-hermaphroditism) இருப்பதாகவும் மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. அப்படியே, அவரை நாம் இடையில்ங்கதவர்(intersex) என்று கண்டரிந்தாலும், பின்கியை "ஆண்" என்று அடையாளபடுத்தும் முடிவு பின்கியை தவிர்த்து யாரிடமும் இல்லை. பிங்கி தன்னை பெண்ணாக அடையாலபடுதிகொள்ளும் ொது, ஏன் மருத்துவ பரிசோதனைகள் அவளை ஆண் என்று சொல்லி கட்டயபடுதுகின்றன? ஒருவர் இடையிலிங்கம் நிலையில் இருந்தாலும் அவருக்கு விரும்பும் பாலினத்தினை தேர்வு செய்து வாழ உரிமை உண்டு. தன்னை அந்த பாலினத்தவராய் உணர, செயல்பட உரிமை உண்டு. ஆனால் பிங்கியின் வழக்கில் இது தலை கீழாக மாற்றப்பட்டுள்ளது


ஆண் தன்மை?:-

பிங்கியின் மீது சுமதபட்டுள்ள ந்த வழக்கினை விசாரிக்கும் பொருட்டு, நீதிமன்றம் அவருக்கு பாலினம் தீர்மானிக்கும் சோதனை நடத்த உத்தரவிட்டது. உயிரியல் ரீதியா, இனபெருக்க உறுப்புக்கள் அடிப்படையில் நமக்கு வழங்கிய பாலின அடையாளங்களை மீண்டும் மீண்டும் உறுதி செய்வதே , இதன் நோக்கமாகும். பாலினத்தினை தீர்மானிக்கும் பாலியல் பரிசோதனை குறித்து அமெரிக்க உளவியல் அமைப்பு வெளியிட்டு அறிக்கையானது, அதன் நம்பகமற்ற தன்மையினை வெளிப்படுத்க்கின்ற்றது. மேலும், எத்தனனை இந்திய மருத்துவமனைகளில் ஒருவரின் பாலினத்தினை நிர்ணயம் செய்யும், பாலின தீர்மானிப்பு குழு உள்ளது? இது குறித்து வெளியான ஒரு செய்தியானது, பிங்கியின் பாலினத்தினை பரிசோதிக்கும் மருத்துவமனையில் அதற்குரிய முக்கிய வசதிகள் ல்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.


உயிரியல் ரீதியான பாளினமானது, ாம் அடையாளப்படுத்தும் பாலியல் அடையாளத்துடன் பொருந்தி செல்ல ேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால், பிங்கி தாம் ஒரு திருனர்(transgender) அல்ல என்பதனை அடித்து கூறும் நிலையில் அவரை மீண்டும் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்துவது , ஒருவித உளவியல் மற்றும் உடலியல் சித்திரவதயாகும்.


பொதுவாக வீராங்கனைகள் மீது இத்தகு புகார்கள் எழுவது, இது முதல் முறையல்ல,. ஏற்கனவே சாந்தி சௌதரராஜன் அவர்கள் மீதும் இத்தகு புகார்கள் கூறப்பட்டது நம்மில் பலருக்கு நினைவிருக்கலாம். அவரின் பதக்கமானது பறிக்கப்பட்டது. மேலும், விளையாட்டு துறையின் விதிகள் படி, ஒரு வீராங்கனையின் பாளினமானது இன்னொருவர் அதை குறித்து சர்ச்சை எழுப்பதவரை , தீர்மானிக்கபடுவதில்லை., அந்த வீராங்கனை எவ்வாறு தம்மை அடையாளபடுத்தும் வகையில் அவரின் அவரின் பாலினம் அமையும்.

இந்நிலையில், பிங்கி மீது இதற்கு முன்னர் இத்தகு புகார் எழுந்ததில்லை. ஆனால், மதுரையில் நடைபெற்ற ஒரு தேசிய விளையாட்டு போட்டியில், பிங்கியிடம் ஆண் ஹார்மோன்கள்(excessive male hormones) மிகையாக இருந்ததால் விளையாட தட விதிக்கபட்டது.

ஆண், பெண் என்ற உடலியல், உளவியல் கட்டமைப்புகளை கடந்து, ஒருவரின் திறனை பார்க்கும் நிலையினை நம் சமூகம் இன்னும் அடையவில்லை என்பதாகும். எத்தனை பேர், இதனால் தம் திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் தம் வாழ்வை மாய்துகொண்டனரோ? பாலினங்கள், மற்றும் சமூகத்தின் கட்டமைப்புக்கள் மனிதருக்ககவே. ஆனால், இவை ஒருவரின் தனி மனித சுதந்திரத்தை, திறமையை பாதிக்கும் வகையில் அமையும் விதம் இருப்பது மிகவும் வேதனை அளிபதாகும்.



பாலியல் வன்புணர்வும் சட்டமும்(rape and law)

இந்திய சட்டப்படி பாலியல் வன்புனர்வானது ஒரு ஆணால், பெண் மீது மட்டுமே நிகழ்தபடுவது . . இதனால், ஒரு பெண், இன்னொரு பெண் ீது பாலியல் வன்புணர்வு புகார் செய்தால் அதை சட்டம் ஏற்றுகொள்ளது, இல்லை புகார் சுமதபட்டவர், எந்த பாலினம் என்று நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும். பிங்கியின் வழக்கில் அவர் "ஆண்" என்று குற்றம் சுமதபட்டாலும் ஒருவேளை அவர் பாலியல் வன்புணர்வு செய்தது உண்மையாகவே இருந்தாலும், அத சட்டமானது தண்டிக்க இயலாது. ந்நிலையில் , இரு தரப்பினருக்கும் சரியான நீதி கிடைக்காமல் போய் விடும். தெளிவு கொண்டு நாம் சட்டங்களை ஏற்றினால் இதக்கு சிக்கல்கள் இல்லை.



காவல் துறையும் உரிமைகளும் :

காவல் துறையானது , குற்றவாளி என்று சந்தேகிக்கப்பட்ட ஒரு நபரை , அவரின் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படும் வரை ுற்றவாளி போன்று நடத்த கூடாது . ஆனால் பிங்கியின் வழக்கில் நடந்தது என்ன?

பிங்கியின் பாலினத்தை தீர்மானிக்கும் முன் அவரை காவல் துறை கையாண்ட விதம் மற்றும் ஆண்கள் சிறையில் அடைத்தது , போன்ற விஷயங்கள் மனித நேயமற்றது.மக்களின் தனியுரிமையை பாதுகாக்க வேண்டிய அரசும் . காவல் துறையும் ஒருவரின் தன்மானத்திற்கு இழுக்கு வருத்தும் பொருட்டு நடந்து கொண்டிருப்பது கண்டனதிற்க்குரியது . தம்மை பெண் என்று அடையாளபடுத்தும் ஒருவரை ஏன் ஆண்கள் சிறையில் அடைக்க வேண்டும் ?


மருத்துவ பரிசோதனையில் நான்கு ஆண் மருத்துவர் மற்றும் ஒரே ஒரு பெண் மருத்துவர் இருந்தது போன்ற விஷயங்கள் மிகவும் அதிர்ச்சிக்குரியவை . இதற்கிடையில் பிங்கியின் பாலியல் பரிசோதனை படங்கள் எவ்வாறு வெளியானது என்ற சர்ச்சை பெரும் புயலாக கிளம்பியது . பிங்கியின் விருப்பத்திற்கு மாறாக அந் பரிசோதனை நடந்தது அந்த பரிசோதனையின் போது பிங்கியின் எம்.எம்.எஸ் வீடியோ வெளியானது ேலும் மனித மாண்பை சிதைக்கும் ெயலாகும். இந்த சர்ச்சையால் பிங்கியின், ரயில்வே வேலையும் பறிக்கப்பட்டது.


இதனை வேதனைகளையும் தாங்கி கொண்டு சிறிதும் தன்னம்பிக்கை இழக்காமல் தான் ஒரு தையிரியம் மிக்க பெண் என்பதில் உறுதியாக இருகின்றார் பின்கி.