பாலினப் பாதுகாப்பின்மை - கேட் பார்ன்ஸ்டெய்ன் ( மொழிபெயர்ப்பு - ஸ்ரீதர் ரங்கராஜ்)


பாலினம் என்கிற பாதுகாப்புக்கு வெளியில் இருப்பவர் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்?
பாலினம் என்கிற விஷயத்தைப் புறக்கணிப்பவர்கள். எந்தவொரு வடிவிலும் உருவிலும் தன் பாலினத்தைப்புறக்கணிப்பவர்கள், ‘ஒரு ஆண் இதைச் செய்யக்கூடாது; ஒரு பெண் அதைச் செய்யக்கூடாது’ என்று இரு பாலினங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளதை மீறுபவர்கள்தான் அவர்கள். உண்மையில் பல்வேறு நாகரிகங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட பாலினங்கள் இருந்துள்ளன. ஆனால் முதன்மைப் பாலினங்களாகக் கலாசாரம் ஏற்றுக்கொண்டதில் சேராதவர்கள், தங்களைத் தாழ்வு நிலையிலிருந்து அகற்றிக் கொள்ளச் சமூகப் பாலினப் பாதுகாப்பிலிருந்து வெளியேறுகிறார்கள். நீங்கள் இயற்கையின் விதிகளோடு முரண்படுகிறீர்கள். அதுவே உங்களைப் பாதுகாப்பின்மைக்குள் தள்ளுகிறது.

உங்கள் புத்தகத்தில் சமூகத்தின் உறுதியான பாலின அடையாளங்களைத் தகர்த்தெறிந்தால் மட்டுமே உங்களின் முழுமையை உணர முடியும் என்று எழுதியிருந்தீர்கள். ஏன் ஒரு குறிப்பிட்ட பாலினத்தைச் சார்ந்திருப்பது நம்மைப் பிணைத்து வைத்திருக்கும் என்கிறீர்கள்?

பிணைப்பு என்பது உங்களை நகர விடாமல் வைத்திருப்பது. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் இயங்காத,அல்லது குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளில் இயங்காத ஒன்றை எவ்வாறு அடையாளப்படுத்துவது? நம் பிடிக்குள் வராத, நம் எல்லைக்குள் இல்லாத ஒன்று நம் முழுமையைப் பாதிக்கிறது. பெண்ணிய இயக்கங்கள், பெண் என்ற அடையாளத்தின் மூலம் உங்களின் முழு வீச்சு எவ்வாறு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது, என்பதை உணர்ந்துள்ளன. அது போலவே ஆண்களின் அமைப்பும். ஆனால் வெகு சிலரே ஆண்களும், பெண்களும் மட்டுமே உள்ள ஒரு சமூகம் எவ்வாறு தம்மைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

உங்கள் மொழியில் ‘விடுதலை’ என்பது என்ன?

என்னைப் பொறுத்தவரையில் விடுதலை என்பது ஆபத்தில்லாத விழுமியங்களை வெளிப்படுத்துவதே என்பேன். இவ்விழுமியங்கள் அடையாளங்களோடு பிணைக்கப்பட்டுள்ளது. இவ் அடையாளங்கள் சமூகத்தால் வழங்கப்பட்டவை. குறிப்பிட்ட வயது வரை ‘நான் டேவி க்ராக்கெட் ஆக விரும்புகிறேன்’ என்றோ ‘நான் இளவரசி டயானாவாக விரும்புகிறேன்’ என்றோ நீங்கள் சொல்லிக் கொள்ளலாம். வளர்ந்தபின் அதைச் சொல்ல உங்களுக்கு அனுமதியில்லை.ஆனால் என்னைப் பொறுத்தவரையில் சாகும் வரை நான் குழந்தைதான். எனவே  விடுதலை என்பது ஆபத்தில்லாத என் வாழ்க்கை விழுமியங்களை வெளியிடுவதுதான்.

சிலர் சொல்கிறார்கள் பாலினத்துடனான சுதந்திர உறவு மற்றும் உங்களின் பாலின இருமையின் மூலம் மனிதனின் பண்புகளையும் ,திறமைகளையும், பங்களிப்பையும் முழுவதும் உணர முடியும் என்று. இன்னும் சிலர் பாலின விடுதலை என்பது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருப்பதின் அனுபவம் மற்றும் தங்கள் பாலினத் தன்மையின் வெளிப்படுத்துதல் என்பதுதான் என்கிறார்கள். இந்த இரு வேறுபட்ட கருத்துகளில் உங்கள் நிலை என்ன?

நான் இவ்விரண்டிலும் எந்த வேறுபாடும் இருப்பதாக நினைக்கவில்லை. அவை பாலின விடுதலைக்கான படிகள் என்று சொல்வேன். முதற்படி நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதுவாக, முழுமையாக இருப்பது. அதாவது நீங்கள் ஆணோ அல்லது பெண்ணோ அதில் முழுமையாக இருங்கள். அதுதான் சுலபமான முதற்படி. அது உங்களுக்குப் போதவில்லையெனில் இரண்டாம் படி, முழுவதும் உணர்வு மயமானதும், இருமையாய் இருப்பதும். இந்நிலையில்தான் உங்களால் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள நிலை  என்பது என்ன? என்று கேட்க முடியும். இந்நிலை உங்களை வெளியிட உதவுகிறதா?உங்களால் இவ்விருமை நிலையிலிருந்து உங்களுடைய அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியுமா? என முயற்சித்துப் பாருங்கள். முடியவில்லையா! இப்போது உங்களுக்கு மூன்றாவதாக ஒரு விஷயம் தேவைப்படுகிறது. அது இவ்விருமை நிலையிலிருந்து வெளிவருவது, இரு எதிர் துருவங்களிலிருந்தும் வேறுபடுவது. ஆண்ட்ரோ மற்றும் கைனி (ஆண்மை, பெண்மை) எனும் இரு பாலினங்களின் இடையே உள்ள இடைவெளியினைச் சுற்றிப் பாருங்கள். உங்களால் அந்த இடத்திலிருந்து உங்களை வெளிப்படுத்த முடிகிறதா என்று பாருங்கள்.

எனவே நீங்கள் குறிப்பிட்ட அவ்விரண்டும் முரண்கள் என்று சொல்லமாட்டேன். என்னைப் பொறுத்தவரையில் அவை படிநிலைகள்தாம். தேவை நீங்கள் உங்களை வெளிப்படுத்துவது, இதில் பாலினம் ஒரு தடையல்ல. அதுவும் போதவில்லையா? இனம், வயது, வகுப்பு என முயன்று பாருங்கள். நான் முதலில் ஒரு ஆணாகவும், பின் இருமை நிலையிலும், பின்பு பெண்ணாகவும், மீண்டும் சற்று மேம்பட்ட ஆணாகவும் முயற்சித்துப் பார்த்து விட்டேன். தற்போது நான் ஆணுமில்லை, பெண்ணுமில்லை. அதைத் தாண்டிய மூன்றாம் நிலையில் இருக்கிறேன் இப்போது நான் ஆண், பெண் மற்றும் அனைத்துப் பாலினங்களின் கலவை.

ஆன்மீகக் கண்ணோட்டத்தில் பாலின வேறுபாடுகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்கிற வரையறை இருப்பதாக நினைக்கிறீர்களா?

நான் இந்த கிரகத்திலிருக்கும் பாலின வரையறைகள் எனக்கு உதவாது என்னும் நிலைக்கு வந்து விட்டேன். அதைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டு விட்டேன். எனக்கான ஒரு உலகத்தை அமைத்துக் கொண்டு வாழத்தொடங்கி விட்டேன். ஆணாகவோ பெண்ணாகவோ இருந்து பார்த்தாயிற்று. இவ்வுலகின் எந்தவொரு கலாசாரமும் இதைத் தவிர வேறு ஒரு பாலினத்தை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. பின் எதற்காக மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும். லாவோட்ஸு சொன்னது போல “துவந்துவமாக இருக்கும் முறைகளில் இருந்து விடுதலை பெறுமுன் நீங்கள் முதலில் அதிலிருந்து வெளியில் இருக்க வேண்டும்”. இரண்டு வாய்ப்புகள் மட்டுமே தரக் கூடிய ஒரு கலாசாரத்தினை என்னால் வழிமொழிய முடியாது. பாலினம் என்பது உங்கள் அடையாளம் என்பதை மறுக்க இயலாது. அதே நேரத்தில் அது ஒருவராலும் ஆராயப்படாததாகவும் உள்ளது. அவ்வுணர்வு வெறும் தானியங்கி.

பாலினத்திற்கும், பாலின மாறுபாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன என்று நினைக்கிறீர்கள்?

என்னைப் பொறுத்தவரையில் இருமை என்ற தாழ்வு நிலையிலிருந்து பாலினத்தை பன்மைக்கு உயர்த்துவதே ஆகும். அதுதான் இன்றைக்கு அநேக கலாசாரங்களுக்குத் தேவைப்படுவது.

பாலின வேறுபாடுகளை ஆண் அல்லது பெண் என்கிற உடலில் இருந்து கொண்டு தாண்டிச் செல்ல முடியும் என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாக இல்லை. உங்கள் உடல் ஆணா அல்லது பெண்ணா? யாருடைய தீர்மானம் அது? என்னுடைய உடல் ஆணா? பெண்ணா? ஆணுடல் என்றால் என்ன? பெண்ணுடல் என்றால் என்ன? நீங்கள் அதற்கான விளக்கமாகத் தரும் வார்த்தைகள் மிகக் கனமானவை. சரியாக இதுதான் ஆணுடல் இதுதான் பெண்ணுடல் என்று நீங்கள் விளக்கும் வரை இதற்கான பதிலைச் சொல்வது சிரமம். எனக்கு அப்படியென்றால் என்னவென்றே தெரியாது. இந்தக் கேள்விக்கு அநேகமான பதில்களை வைத்திருக்கும் அநேகம் பேரைத் தெரியும், நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியாது. சொல்லுங்கள் ஆணுடல் என்பது என்ன?

எனக்குத் தெரிந்தவரை XX மற்றும் XY குரோமோசோம்கள்தான் அவை.
நீங்கள் உங்கள் க்ரோமோசோமைப் பரிசோதித்ததுண்டா?

எனக்குத் தெரிந்தவரை இல்லை.
பின் எப்படி உங்களுக்குத் தெரியும் உங்களுடையது ஆணுடலா பெண்ணுடலா என்று? உண்மையில் க்ரோமோசோம்களில் பதிநான்கு சாத்தியக் கூறுகள் உள்ளன. XX, XY, XXY, YYX, XO, XXX, XOX. . . . என்று. ஆனால் உண்மையில் அத்தனை பாலினங்கள் இருக்கிறதா என்ன? ஆக பாலினம் என்பது க்ரோமோசோம் அடிப்படையில் இல்லை.

ஆனால் நம் உடலுக்கு இரண்டாம் நிலைப் பாலின அடையாளங்கள் உள்ளனவே, மார்பகங்கள், முகத்தில் வளரும் முடி போன்றவை. மேலும் நாம் நம்மை ஒரு குறிப்பிட்ட பாலினமாகத்தான் அடையாளப்படுத்திக் கொள்கிறோம், நம் உடை மற்றும் தலையலங்காரம் மூலமாக. நான் கேட்க விரும்புவது ஆணென்றும் பெண்ணென்றும் அடையாளப்படுத்தப்படும் உடலில் வாழ்ந்து கொண்டு இதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதன் சாத்தியக்கூறுகள் பற்றி?

நிறையப்பேர் எனக்குப் பெண்ணுடல் இருப்பதாகத்தான் நினைக்கிறார்கள். ஆனால் அதை முதலில் மறுப்பது நான்தான். எனக்கு ஆண்குறி உண்டா எனில், ஆம் இருக்கிறது. ஆனால் உள்ளிருந்து வெளிப்பக்கமாகத் திருப்பப்பட்டுள்ளது. இருப்பினும் அது ஆணுறுப்புதான். எனக்குப் பெண்ணுறுப்பு இருக்கிறதா? இல்லை. ஆனால் பாலின உறுப்பு வகைப்பாட்டியலின்படிப் பார்த்தால் எனக்கிருப்பது உள்வாங்கிய அமைப்பு, வெளிநீண்ட அமைப்பல்ல. அதுபோன்று உங்களால் மார்பகங்களோடு ஒரு ஆணைப் பார்த்திருக்க முடியாது. நான் என்னை விடப் பெரிய மார்பகங்களோடு ஆணைப் பார்த்திருக்கிறேன். உங்கள் ஆடையிலிருந்து உங்களுக்கு மார்பகங்கள் இருக்கிறதா என்பது தெரியாது. தொப்பி வைத்திருந்தால் உங்கள் தலைமுடி எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியாது. எனவே வெளித் தோற்றத்திலிருந்து நீங்கள் யாரென்று தெரிந்து கொள்ள முடியாது.எனவே அது தலை முடியோ மார்பகங்களோ அல்ல. அப்படியென்றால் ஹார்மோன்களா? உங்களுக்குத் தெரிந்திருக்கும் டெஸ்டோஸ்டீரான் மற்றும் எஸ்ட்ரோஜன், அவைதான் எல்லாம் என்றால் உங்களால் பாலினத்தை மருந்துக் கடைகளில் வாங்க முடியும். எனவே ஆண் மற்றும் பெண் என்பது சார்ந்த கேள்விகளுக்கு சரியான விளக்கம் இல்லாமல் என்னால் பதில் சொல்ல முடியாது.

பாலினத்தின் எத்தகைய கூறுகளை உயிரியல் சார்ந்தது மற்றும் தனித்துவமானது என்று பிரிப்பீர்கள்? உங்களுக்குத் தெரிந்த பாலின மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் அல்லது ஹார்மோன் சிகிச்சை செய்து கொண்டவர்கள் அப்பார்வையை மாற்றியதுண்டா?

அது சுலபம். என்னைப் பொறுத்த வரை அளவிடக்கூடிய எல்லாமும் உயிரியல் சார்ந்தது. மற்றவை அனைத்தும் அகவயமானது, தனித்துவமானது. பாலின அடையாளங்கள், ஹார்மோன், க்ரோமோசோம் மற்ற கேட்கும், பார்க்கும், நுகரும், தொடும், அளவிடக்கூடிய அனைத்தும் உயிரியல் சார்ந்ததே. ஆனால் ‘நான் இந்த ஆடையை அணிய விரும்புகிறேன்’ என்பது தனித்துவமானது.

உளவியல் சார்ந்த, உணர்வு சார்ந்த அல்லது நடத்தை சார்ந்த எதையேனும் உயிரியல் சார்ந்து பார்க்கிறீர்களா? அல்லது அவை கலாசாரம் சார்ந்தது என்பீர்களா?
இந்த உரையாடலை ஒரு நிமிடம் பின்னோக்கிச் செலுத்தலாம்,இல்லையெனில் இதே இடத்தில் அது மாட்டிக் கொண்டிருக்கும். நீங்கள் பாலினம் என்று குறிக்கும்போது ஆண் மற்றும் பெண் என்றுதான் மறைமுகமாகக் குறிப்பிடுகிறீர்களா?

ஆமாம்.
அப்படியானால் எனக்கு அது சிரமமாக இருக்கும். இப்படி வைத்துக் கொள்ளலாம். பாலினம் என்று பேசும்போது இனி சிறுவன், சிறுமி, ஆண், பெண், ஆணிலிருந்து பெண்ணானவர், பெண்ணிலிருந்து ஆணானவர் என்று ஆறு பாலினங்களைக் குறிப்பிடுவதாகக் கொள்வோம்.
சரி, இப்போது என்னில் நானே முரண்பட்டுக் கொள்கிறேன். டெஸ்டோஸ்டீரான் உங்களுக்கு ஆண் தன்மையை, கோபத்தைக் கொடுக்கும். எஸ்ட்ரோஜன் மனிதரின் பாலின ஈர்ப்பை மாற்றியமைக்கக் கூடியது, எனக்கு அது நடந்துள்ளது. ஆனால் எஸ்ட்ரோஜனும் டெஸ்டோஸ்டீரானும் முறையே ஆண் பெண் என்று யார் சொன்னது? உங்கள் உடலில் உள்ள XY க்ரோமோசோம் உங்களின் குறிப்பிட்ட நடத்தையை-

புரிகிறது, சில நடத்தைகள் உடற்கூறு சார்ந்தது அதை நாம்தான் ஆணென்றும் பெண்ணென்றும் பிரித்துக் கொள்கிறோம் என்கிறீர்கள்.

மிகச்சரி. இல்லையெனில் அது அர்த்தமற்றதாகிவிடும்.  உங்களுக்கு டெஸ்டோஸ்டீரான் கொடுத்தால் உங்கள் முகத்தில் முடி வளரலாம், அதனால் நீங்கள் ஆணாகி விடுவீர்களா? உங்களுக்குத் தெரியுமா? தொடர்ந்து டெஸ்டோஸ்டீரான் கொடுக்கப்பட்டால் உங்களின் க்ளிடோரிஸ் மூன்றிலிருந்து நான்கு அங்குலம் வரை வளரும். அது பார்க்க எப்படியிருக்கும்? அதை நீங்கள் பெண்ணுடல் என்பீர்களா? இது போன்ற விஷயங்களைப் பற்றி நினைக்கையில் சிரிப்பதே ஞானத்தின் அடையாளம் என்பேன், அதன் பின் உங்கள் அடிப்படைப் பாலினக் கொள்கையென்பது இது அல்லது அது என்பதனால் கட்டமைக்கப்பட்டு இருக்காது. உங்களின் சில கேள்விகளைப் புரிந்துகொள்ள நான் சிரமப்படுகிறேன் ஏனெனில் அவை இது அல்லது அது என்ற கருத்தை உடையனவாயிருக்கிறது.

உங்கள் ‘பாலினப் பாதுகாப்பின்மை’யில் பாலின விடுதலை என்பது  சுதந்திரமாக வேறுபட்ட பாலின அடையாளங்களுக்குள் மாறுவது என்று கூறினீர்கள்.
பலதரப்பட்டவற்றுக்குள்.

ஆனால் இதில் மற்றொரு நோக்குமிருக்கிறது, அதைப் பற்றி உங்களிடம் கேட்க வேண்டும். ஆன்மீகப் பயிற்சியளிக்கும் பெரும்பாலானோர் அடையாளங்கள் அத்தனையும் துறப்பது என்பதில் பாலின அடையாளத்தையும் சேர்த்துக் கொள்கின்றனர். ஆனால் பாலினத்தைச் சார்ந்திருப்பதும் அல்லது விலகியிருப்பதும் கூட உங்கள் ஆன்மீக முன்னேற்றத்துக்குத் தடையாகலாமில்லையா? அதாவது குறிப்பிட்ட பாலினம், பாலின மாறுபாடு அல்லது பாலினமே இல்லை என்ற தத்துவத்தைச் சார்ந்திருப்பதால்?
ஆம். அப்படிச் சார்ந்திருந்தால் அது நிச்சயம் ஒரு தடையாக இருக்கும்.

இது ஒரு நுட்பமான கேள்வி. தன்னிடத்தில் உள்ள பாலின அடையாளங்களையும், தன்னைப் பற்றிய சுயபிம்பத்தையும் துறப்பதன் சாத்தியக்கூறு பற்றிக் கேட்கிறேன், அவற்றைத் துறந்து விடுவதும் பின் ஒவ்வொரு கணத்திலும் இயற்கையாகவும், திடீரென்றும் ஏற்படும் அதை உணர்வதும், அதே சமயத்தில் பாலினத்துக்கான தன்மை மற்றும் சுபாவங்களை மறுக்காமலும் ஒதுக்கிவிடாமலும்,  ஒழுங்குபடுத்தாமலும், அல்லது அது சார்ந்த முன்முடிவுகளோடு இருப்பதைத் தவிர்ப்பதும் சாத்தியமா?

நீங்கள் கேட்பது ஒரு உயர்ந்த நிலை. எனக்கு அது சாத்தியம். ஏனெனில் என் வாழ்க்கை முழுதும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன், நாற்பது வருடங்களுக்கும் மேலாக இதைப் பற்றிக் கவனமாக ஆராய்ந்திருக்கிறேன். நான் அறிந்தவற்றை என் வாழ்க்கையின் மற்ற பகுதிகளுக்குப் பயன்படுத்துகிறேன்.

பாலினப் பாதுகாப்பின்மையில் நீங்கள் விவரித்தது போல பாலின மாற்றம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் வேறுபட்ட பாலினங்களில் மாறி மாறி இருப்பதைப் பார்க்கையில், ஒரு குறிப்பிட்ட பாலினத்துக்குள் சிக்கிவிடாது, தேர்ந்தெடுக்கக் கிடைக்கும் அத்தனை சாத்தியக் கூறுகளையும் வாழ்ந்து பார்ப்பது தெரிகிறது. நான் இதைப் பற்றிய சிந்தனை எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் கேட்க விரும்புகிறேன்.

இல்லை, இதை அனைவருமே செய்கிறார்கள், நாங்கள் மட்டுமல்ல. இதில் நாங்கள் எந்த அளவுக்குச் சுயவுணர்வோடு ஈடுபடுகிறோம் என்பதுதான் வேறுபடுகிறது.

உண்மைதான். இந்தப்பாத்திரங்களை ஏற்பவர்களும் தம் பாலினத்திற்கான சுய உணர்வோடும் மிகையாகவும்தான் நடிக்கிறார்கள். அது இப்படிப்பட்டவர்களைப் பாதிக்கும். ஆனால் இருபாலின ஆண்களும், பெண்களும் ஒப்புக் கொள்ளும் அளவில் இதைச் செய்கிறார்கள்.
நான் ஜான் வேய்ன், மர்லின் மன்றோ, ப்ரூஸ் வில்லிஸ், ஜீனா டேவிஸ் ஆகியோரைக் குறிப்பிட இருந்தேன்.


சரிதான். இருப்பினும் ஆன்மீக விடுதலை என்பது சுயமில்லாது இருப்பது. ஒரு பாலினமாக இருப்பதற்கும் அந்தப்பாத்திரத்தை ஏற்றுக் கொள்வதற்கும் உள்ள வேறுபாடு பற்றி என்ன சொல்கிறீர்கள்.
நான் அதில் எந்த வேறுபாடும் இருப்பதாய் நினைக்கவில்லை. அது ஒரு நிலையிலிருந்து உங்களை மறு நிலைக்குக் கூட்டிச் செல்வதுதான். ஒருவகையில் இந்த இருமுனைகளிலிருந்தும் விடுபட்டு இவ்விரண்டு பாலினங்களும் என்னவென்று புரிந்து கொள்வதும், அவற்றில் உங்களுக்கு ஏற்றது எது என்பதைத் தேர்வதும் முக்கியம். எந்தப்பாலினமும் சாராதிருப்பதால், அதாவது எந்தப் பாலினத்திலும் நிலைக்காதிருப்பதால் நம்மால் எந்தப் பாலினத்தின் செயல்களிலும் ஈடுபட முடிகிறது, எந்தப் பாலினத்தினாலும் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை ஏற்படுத்த முடிகிறது, பாலினங்களின் அனுபவங்களை அனுபவிக்க முடிகிறது. இதுவும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள்தான். ஆணால் சில வேலைகளை செய்ய முடியும், அது பெண்ணால் முடியாது.


ஆனால் இதுவும் சுய உணர்வோடுதானே இருக்கும்.
ஆம். இது ஒரு பாதை.

என்ன சொல்ல வருகிறீர்கள்?

பாலின மாறுபாடு என்பதில் நுழைவதற்கு முன் நீங்கள் முழு உணர்வோடு முதன்மைப் பாலினங்களின் பாத்திரங்களில் முழுமையாக ஈடுபட வேண்டும்.


பாலின மாறுதலில் இதுதான் வழி என்கிறீர்களா?
இது கடினமான வழிதான், ஆனால் கலாசாரத்தால் இப்போதைக்கு அனுமதிக்கப்பட்ட ஒரே வழி இதுதான். இது உங்களை வெளிப்படுத்தும் வழி. ஆனால் நீங்கள் இந்த மாறுதலுக்கு முன் இந்தக் கலாசாரத்தால்,சமூகத்தால் எப்படி நடத்தப்படுவீர்கள் என்பதைச் சிந்தியுங்கள். பெரும்பாலானோருக்கு பாலினம் என்பதிலிருந்து விலகியிருப்பதும் அதை மறந்து விடுவதற்கும் வித்தியாசம் தெரிவதில்லை.


நான் இதிலிருந்து மாறுபடுகிறேன்.
நான் மேலும் மேலும் பாலினம் என்பதிலிருந்து விடுபடுதல் எனும் நிலைக்கு வந்துவிட்டேன் என்கிறேன். நீங்கள் ஆண் மற்றும் பெண் என்பதிலிருந்து இன்னமும் விடுபடவில்லை என்று நினைக்கிறேன்.


ஆமாம்.
நீங்கள் குறைந்தபட்சமாகவேனும் உங்களை பாலினத்துக்கு முக்கியத்துவம் தராதவராக உணர்வீர்கள்-அல்லது அது ஒரு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயமாக இருக்காது. ஆனால் இன்றிரவு படுக்கைக்குப் போகும்போது நீங்கள் பெண் என்று உணர்ந்தவாறு செல்வீர்கள். நான் அதை ஒருபோதும் செய்ததில்லை படுக்கைக்குச் செல்லும்போது நான் ஆணென்றோ பெண்ணென்றோ ஒரு போதும் நினைத்ததில்லை. எப்போதும்.


உண்மை; ஆனால் என் அனுபவம் வேறாக இருக்கிறது. பாலின அடையாளங்களைத் தாண்டி இருப்பது என்பதில் மற்றொரு அணுகுமுறையும் இருக்கிறது. பெரும்பாலான ஆன்மீகப் பயிற்சிகள் உங்களை லௌகீக உலகில் மூழ்கடிக்கக் கூடிய விஷயங்களிலிருந்து மாறச் சொல்கின்றன, காலம் தாண்டிய, எண்ணம் தாண்டிய, அண்டவெளியைத் தாண்டிய, மனதைத் தாண்டிய ஒன்றோடு ஒன்றுவது பற்றிப் பேசுகின்றன. ஆனாலும் நாம், நம் பாலினமாகவே இருக்கிறோம். ஆனால் அது ஆன்மீக முன்னேற்றத்தின் அடிப்படைக் குறியீடோ அல்லது மறதியோ அல்ல. 

நாம் நம் உடலோடே இருக்கிறோம், இவ்வுடலுக்கான வெளிப்பாடுகளை வெளியிடுகிறோம், இயற்கையாக, ஆனால் அதை முனைந்து செய்யாது, நடிப்பாகவோ, வேறெவ் பாதிப்போ இல்லாமல். அது மர்லின் மன்றோ போன்றிருந்தாலும் சரி அல்லது ஓர்பால் ஈர்ப்புடையவர் போலிருந்தாலும் சரி, அது வெறும் அபிநயமாகவே இருக்கும். சரிதானே?

அபிநயங்கள் எப்போதுமே விளையாட்டுத் தன்மையுடையவை. அவை நம்மைச் சிரிக்க வைக்கின்றன. ஜென் துறவிகளில் பலர் இப்படிச் சிரிக்க வைத்தவர்கள்தான். தாவோவின் குருக்களும் அப்படியே. சுவாங் ட்ஸூ ஒரு புரட்சிக்காரர். இன்றைக்கு இருக்கும் பலரை விட மிக உயர்ந்தவர்.

நீங்கள் இது அல்லது அது எனும் கேள்விகளையே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கு நல்லது, கெட்டது என்றால் என்னவென்று தெரியாது, சரி, தப்பு என்றால் என்னவென்று தெரியாது. எனவே மீண்டும் என்னுடன் நான் முரண்பட்டுக் கொள்கிறேன். நீங்கள் அத்தனை பாலினங்களின் தன்மைகளையும் ஏற்றுக் கொண்டால்தான் பாலின விடுதலை அடைய முடியுமா? என்றால், இல்லை. நீங்கள் இந்தப் பாலினம் என்பது எப்படிப்பட்ட விழுமியங்களைத் தன்னிடத்தில் கொண்டுள்ளது என்று சோதிக்க வேண்டும். விழுமியங்களில் இருந்து உங்களின் பாலினப் பார்வையை அகற்ற வேண்டும். உண்மையில் அவ்விழுமியங்கள் எதற்காக உள்ளனவோ அதற்காக அவற்றை பாலினம் சாராது ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது உங்களின் அடையாளம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது? ஆணென்கிற அடையாளத்தோடு உங்களைப் பார்க்கும் மற்றவர்களின் பார்வை எவ்வளவு முக்கியமானது? பெண்ணென்கிற அடையாளத்தோடு எவ்வளவு முக்கியமானது? உங்களிடத்திலும், என்னிடத்திலும், ஆணென்றும், பெண்ணென்றும் மற்றவர்களுக்கு உறுதிப்படுத்துகிற அல்லது அதிகரிக்கிற விஷயங்கள் என்னென்ன? அதுதான் பாலினத்தோடு உங்களைத் தொடர்புபடுத்துகிறது.


இதைச் சரியான முறையில் எப்படி அணுக வேண்டும்?
என்னைப் பொறுத்தவரையில் துணிந்து செய்வதுதான். என் புறத்தோற்றத்தை நீங்கள் கவனிப்பதைப் பற்றி நான் கவலைப்படாமலிருப்பது. என்னால் அதை எள்ளலுடன் கடக்க முடிவது. போதிசத்துவர் சொன்னது போல: உங்களைத் தாழ்வுபடுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்காகக் கட்டமைக்கப்பட்டுள்ள விதிகளை விட்டு வெளியேறுங்கள்.

விதிகளை விட்டு வெளியேறுபவர்கள் மற்றவர்களை விட பலத்துடன் இருக்கிறார்கள்.ஏனெனில் அவர்கள் சமூக, கலாசார, மதக் கட்டளைகளிலிருந்து வெளியேறத் துணிகிறார்கள். வெளியேறியவுடன் கிடைக்கும் சுதந்திரம் மற்றும் ஆற்றல், நம்மை, இதிலிருந்து வெளியேறத் துணிவில்லாதவர்கள் பயத்துடனும், வியப்புடனும் பார்க்க வைக்கிறது. நீங்கள் இது போன்று பல தளைகளை உடைத்தெறிந்தவர். அதை மறைக்க முயலாது மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பவர். தளைகளை உடைத்தெறிகையில் ஏற்படும் பலத்தை அனுபவித்திருக்கிறீர்களா?

ஆம், சில விஷயங்களை நான் தகர்த்திருக்கிறேன். தடைகளை உடைப்பதென்பது சமுதாயத்தில் ஒரு மனிதனைக் கீழானவனாகக் காட்டும். இதில் அபத்தமான உண்மை என்னவென்றால் அதுதான் அவனுக்குப் பலம். ஒரு முட்டாள் அரச பதவியில் இருப்பது போல். இதைத் தகர்த்தெறிந்த பின் உங்களுக்கு ஏற்படும் சுதந்திரமென்பது சமூகம் தரும் அவமானம் எனும் சவுக்கடியிலிருந்து விடுதலை. என்னை அவமானப்படுத்த முடியாது. என்ன செய்ய முடியும் உங்களால்? என்னை வேறு பெயர்களால் அழைப்பீர்களா? நான் கண்டு கொள்ளப் போவதில்லை. உள்நகைப்போடு என்னை  ‘லெஸ்பியன்’ என்பீர்களா? ஆமாம் என்று சொல்வேன். நீ ஒரு ஆண் என்பீர்களா? சரிதான் என்பேன். அல்லது ’குறியை அறுத்துக் கொண்டவன்’ என்றால் ’இல்லை அதை வெளிப்பக்கமாகத் திருப்பிக் கொண்டேன்’ என்பேன். நான் அவமானப்படும் விஷயங்கள் மிகக் குறைவு, இதுதான் சுதந்திரம்.

பாலினம் தனக்கென்று சில சமூகப் பொறுப்புகளைக் கொண்டுள்ளது. அதை நீங்கள் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம்; மறுப்பது என்ற முடிவெடுத்தால் நீங்கள் அவமானம் அடைய நேரிடும் - அதை ஒரு விளையாட்டாக நீங்கள் எடுத்துக் கொள்ளும்வரை. இது ஞானத்தை நெருங்கிய நிலை.  “ஆமாம்,எனக்கு இது பிடித்திருக்கிறது அதனால் செய்கிறேன்”என்பது. ஒரே சமயத்தில் ஆண், பெண், சிறுவன், சிறுமி, அத்தை, மாமா, சகோதரி, சகோதரன், ஆசிரியர், மாணவர் என்று எத்தனை பாத்திரங்கள்? மாறி மாறி மாறி மாறி மாறி…….. ஞானமடைந்தது போல் இருக்காது? கடைசியில் நான் உணர்ந்து கொண்டுவிட்டேன், இச்சமூகத்தில் என்னை நிறைக்கக் கூடிய ஒரு சமூக அடையாளம் இல்லவே இல்லை. எனக்குப் பிடித்த பாத்திரங்களில் ஒரு வானம்பாடி போல் திரிந்து கொண்டிருக்கிறேன்.

ஒருவேளை நாளை விடிந்ததும் பரிணாமம் மூலமாக அனைவருமே பால்மாறுபாடு அடைந்து இம்முதன்மைப் பாலினங்களிலிருந்து மாறிவிட்டால் என்ன நிகழும் என்று நினைக்கிறீர்கள்?
முதலில் வியக்கத்தக்க வகையில் மக்கள் எக்குத்தப்பாக இருப்பார்கள். தம் பாலினத்துக்குரிய செய்கைகள் எதுவுமிருக்காது. இவ்வுலகில் வாழவும், மற்றவரோடு பழகவும் அவர்கள் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆண் மற்றும் பெண்களுக்கான எதையும் அவர்களால் உபயோகப்படுத்த முடியாது. ஆண் மற்றும் பெண் என்பதை மட்டுமே சார்ந்து இவ்வுலகில் எவ்வளவு விஷயங்களிருக்கிறது தெரியுமா? இரண்டையும் தவிர்த்து முயற்சி செய்து பாருங்கள். ஒரு மீசை வைத்துக் கொள்ளுங்கள். ஒருநாள் மக்களைத் திகைக்க வையுங்கள். அல்லது சுலபமாக இதைச் செய்யலாம், இம்மூன்று கேள்விகளை உண்மையாக உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள். ஆணென்பது என்ன? பெண்ணென்பது என்ன? நாம் ஏன் இது அல்லது அதில் இருக்க வேண்டும்? உலகில் பெரும்பாலானோர் இம்மூன்று கேள்விகளைக் கேட்டுக் கொண்டால் இந்தப் பூமியே மாறிவிடும்.

பாலின  அடையாளம் குறித்த இக்கேள்விகளை உங்களைப் போலவே மற்றவர்களும் ஆன்மீக வழியில் கேட்க வேண்டும் என்று சொல்வீர்களா?

ஞானத்தை அடையும் வழிகளில் ஒன்று, பாலினம் வழியாக அடைதல். பாலினம் என்பதை வைத்து வழங்கப்படும் சலுகைகளிலிருந்து விடுபடுவது. அதுதான் நான் செய்தது. ‘அழகான பெண்’ ‘ஊமைப் பெண்’ எனும் சலுகையையும் உதறி விட்டேன். இது இப்போது ஒரு விளையாட்டு போலாகிவிட்டது. நான் சொல்வது இதைத்தான், சிலருக்கு தியானத்தின் வழியை ஆராய்வதை விடவும் பாலின வழி எளிதாக இருக்கும். தியானம் என்பதே ஒருநிலைப்படுத்துதல்தான். பாலினத்தை மாற்றியமைக்க எவ்வளவு ஒருமுகப்படுத்துதல் தேவையென்று தெரியுமா? இதுவும் தியானப் பயிற்சிதான். கணக்கற்ற விஷயங்களில் மிக நுட்பமாக கவனத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். எல்லாவற்றையும் செய்து விட முடியாதென்றாலும் இயன்றவரை உங்கள் கவனத்தைப் பல இடங்களில் குவியுங்கள், மற்றவற்றை விட்டுத்தள்ளுங்கள். அதுதான் தியானம். நீங்கள் ‘ஜென்னும், பாலினப் பராமரிப்புக் கலையும்’ என்பதில் இருந்தால் அதுவும் ஒரு தியான முறைதான். நான் சொல்வதெல்லாம் பாலினத்தில் கவனத்தோடு இருப்பின் அது ஞானத்துக்கான வழி என்பதுதான். அது என்னை வெகு தொலைவுக்கு நடத்திக் கொண்டு வந்துள்ளது, விஷயங்களைப் புரிந்து கொள்ளவும், எனக்குப் புரியாதவற்றை ஏற்றுக் கொள்ளவும், என்னுடைய நகைச்சுவையுணர்வை அதிகப்படுத்தவும் வேறெதையும் விட உதவியிருக்கிறது.

இருனர்: Bigender என்பவர் யார்? - © கோபி ஷங்கர்



இருனர்: Bi-gender

ஆண் என்ற பறவையும்
பெண் என்ற பறவையும் 
சேர்ந்து வாழும் ஒரே கூடு.!

கடந்த 2012-ல் மிகப் பிரபலமான நரம்பியல் ஆராய்ச்சியாளரும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் விளையனூர் எஸ்.ராமச்சந்திரன் அமெரிக்காவில் தான் மேற்கொண்ட Alternating gender incongruity (AGI) என்ற ஆராய்ச்சியில் இருனர் மற்றும் பல்வேறு பாலினம் பற்றிய தெளிவான அறிக்கையை சமர்ப்பித்தார். பால் புதுமையினருடன் தொடர்புடைய ஆராய்ச்சியாகவும் அதற்கு அடித்தளமாகவும் அமைந்தது. இவர் ஆலடி கிருஷ்ணசுவாமி அய்யரின் பேரனாவார்.

 ஒரே உடலில் இரு உயிர்கள் வாழ்வதை போன்றதே இருனரின் பாலின அடையாளமாகும். தான் ஒரு ஆண் மற்றும் பெண் என்று தம்பாலினத்தினை வரையறை செய்வர். இவர்களின் இத்தகு இரு முகங்களையே பெண்ணியல்(En Femme) மற்றும் ஆணியல்
(EnHomme)என்று குறிப்பிடலாம். 

பால் நடுநர்கள் தம்மை ஆணும் பெண்ணும் இணைந்த கலவை 
என்றும் கருதுவர்
ஆனால் இருனர் தம்மை கலவை என்று கருதமாட்டார். 

தனித்தனியே தாம் ஒரு ஆண் என்றும் பெண் என்றும் கருதுவர். இவர்களுக்கு திருநங்கையர் போலே தம் உடலினை மாற்ற வேண்டும் என்ற ஆர்வம் கிடையாது. 
ஆராய்ச்சிகளின் படிதிருனர்களுள் மூன்று சதவிகிதம் மக்கள் 
இருனராக தம்மை அடையாளம் கண்டு கொள்வதாக அறிவியல் கூறுகின்றது. 


 இது ஒரு மேல்நாட்டு ஏற்றுமதியாஇல்லை. 

Ila Devi
இந்து புராணங்களில் இருனர் பற்றிய குறிப்பு நவகிரகங்களுள் 
ஒருவராகிய புதனின் துணைவியாகிய இலாவின் கதையில் பதிவாகியுள்ளது. 
சிவன் மற்றும் பார்வதியால்ஒரு மாதம் ஆணாகவும் இன்னொரு 
மாதம்பெண்ணாகவும் இருக்க  சபிக்கப்பட்ட இலாதான் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் புதனுக்கு துணைவியாகிறார். 
இங்கனம்இலா-விடம் இரு கூறான தனிதனி பாலினங்கள் உள்ளன. 

இதுபோலவே இருனர்களிடம் , ஆண் மற்றும் பெண் என்ற தனித்தனியானபாலின அடையாளம் வெளிப்படும். ஒரு மாதம் ஆணாகவும் இன்னொரு மாதம் பெண்ணாகும் திகழும் இல போலவேஒரு நேரம்தம்மை முழு ஆணாகவும்இன்னொரு நேரம் தம்மை முழு பெண்ணாகவும் இருனர் கருதுவர். 

இதை வாசிக்கும் ஒருவர் இது பலஆளுமை கோளாறு  என்று 
கருதலாம். 
ஆனால் இது முற்றிலும் தவறு. இத்தகு கோளாறு உடையவர்கள் தங்கள் தினசரி நிகழ்வுகளை மறந்துவிடுவர் மற்றும் அவர்களுக்குள்ளே இன்னொரு ஆளுமை இருப்பது குறித்து விழிப்புணர்ச்சி அவர்களின் மனதில் இருக்காது.

ஆனால்இருனர்கள்தம்மைச் சுதந்திரமாகமுழு நலத்துடன்தன் 
பாலின அடையாளத்தினை ஏற்றுகொள்வர். அதில் வாழ்வதில்
அவர்கள் நிறைவடைவர்ஏனெனில் குழம்புவதற்கு இது மன நோய் அல்லமாறாக தம்மை தாமே  உணர்வது. 

முழுனர்: pangender என்றால் என்ன? - © கோபி ஷங்கர்


முழுனர்: pan-gender
முழுமையும் கலந்து 
ஒருமை ஆனோம்!
அனைத்து பாலினமும்
வசிக்கும் ஒரு அழகிய வீடு!

முழுனர் (pangender) என்ற சொல்லே முழுமை என்ற அர்த்தத்தை தருகின்றதல்லவாஅதுபோலவே முழுனர்,அனைத்து பாலினங்களின் கூறுகளை உள்ளடக்கிய பாலின அடையாளத்தினை கொண்டவர்களே       முழுனர்கள். 

எந்த ஒரு பால் அடையாளத்தினைமுழுமையாக சாராமலும் தம் பாலினத்தினை வெளிப்படுத்துவர். 
எவ்வாறு மலையிலிருந்து உற்பத்தியாகும் ஒடையானது போலவே முழுனரும் எந்த ஒரு தனிப்பட்ட பாலின அடையாளத்தில் தேங்கிநிற்பவரல்ல. 

இவர்களின்    பாலினஅடையாளத்தினை உணராத பலர்இது ஒரு இடை நிலை  
அல்லது குழப்ப நிலை என்றும் சொல்லலாம். 
ஆனால் அது உண்மையல்ல. குழம்பி  தெளிவதற்கு இது ஒன்றும், மாசுபட்ட நீரல்ல! மாறாக உணர்வு.! பாலின உணர்வு! 

மேலும் கூறலாம்,முழுனர்களுக்கு அதிகமாக குழப்பம் உண்டு என்று! ஆனால் உண்மை என்னவென்றால்,முழுனர்கள் தாங்கள் முழுனராக
இருப்பதில்முழுனராக வாழ்வதில்  பிற பாலினத்தவரைப்  போலவே முழு மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.



 பல முழுனர்கள்தாம் யாரிடம் பாலீர்ப்பு கொள்கின்றனரோ
அதற்கு தக்கவாறு கூட தம் பாலின அடையாளத்தினை மாற்றிகொள்வர். 
எடுத்துக்காட்டாக, ஆணின் உடலுடைய ஒரு முழுனர்
தாம் இன்னொரு ஆணிடம் ஈர்க்கப்படும் போது ஒரு நம்பியாகவோ (Gay) , இல்லை ஒரு பெண்ணால் கூட ஈர்க்கப்படலாம். 
இத்தகு சிறப்பு பண்பினைஉணரா நிலையில்இவர்கள் பிறரால்பாலியல் இன்பத்திற்காகவே இவர்கள் இப்படி மாறுகின்றனர் என்று 
தவறாக கருத வாய்ப்புண்டு.

 பாலியல்இன்பத்திற்காக மட்டுமே பிற பாலினத்தவரின் உடை 
அல்லது அலங்காரங்களை அணிபவர்கள் வேறுமுழுனர் வேறு 
என்பதை நாம்உணர வேண்டும். 

 முழுனர்கள் சட்ட ரீதியாக அங்கீகரிக்கபடவேண்டும். தம்மை ஆண் 
என்றோ பெண் என்றோ திருநங்கை என்றோ கருதாததற்கு தனியாக சட்ட ரீதியான அங்கீகாரம் அளிப்பது மிகவும் அவசியமாகும்
ஏனெனில் ஆண்,பெண்,திருநங்கை என்பவை கடந்தவயே பாலினங்கள். 
அப்போது தான் முழுனர்கள் முழுமையாக சுதந்திரமாக தம்மை வெளிபடுத்த இயலும்.


பால்நடுநர்: (Androgynous) என்பவர் யார்? - © கோபி ஷங்கர்

ரிதுபர்னோ கோஷ்
இவர் 11 தேசிய திரைப்பட விருதுகளையும், பல உலகளாவிய திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ள ஒரு சிறந்த இயக்குனர், நடிகர், அறிஞர் , இவரின் பாலினம் திரையுலகில் ஒரு ஒரு பெரிய சர்ச்சையை 
  உண்டாக்கியது. இவர்  பெரும் பாலும் பால் நடுநர் போலவே திகழ்ந்தார் அவர் தான் வங்காள மேதை ரிதுபர்னோ கோஷ்இவரே நவீன உலகின் பால்நடுனரின் சிறந்த எடுத்துகாட்டு


ஆணும் பெண்ணும் கலந்த கலவை.!

கலவைகள் என்றும் அழகானவை!         

இயற்கையில் எதுவும் இரு துருவங்கள் இல்லை. ஒளி வெள்ளையானது தான் , ஆனால் அதன் உள்ளே அமைந்திருக்கும் நிறங்கள் பற்பல. அவற்றின் ஒருங்கிணைப்பின் வடிவமே நாம் உணரும் வெள்ளை ஒளி. இயற்கையில் இவற்றை அறியும் நாம்மனிதனின் பாலினத்தில் இவற்றை கண்டுகொள்வதில்லை. ஆண் மற்றும்   பெண் என்ற இரு துருவங்களே பாலினம் என்பதை கடந்து        இவை ஒளியின் தன்மை , போலவே தம் பாலினமும் ஆண்மை மற்றும் பெண்மையின் கலவை என்று தம்மையேஅடையாளப்படுத்திககொள்ளும் மக்களே பால் நடுனருள் அடங்குவர். 

ஏன் இவர்கள் பண்பு இப்படி மாறுபடுகின்றதுநம்மில் பலர் அவர்கள் உடலில் ஆண் மற்றும் பெண்ணுக்குரிய தன்மைகள் அமைந்திருபதாலயே என்று நினைக்கலாம். ஆனால் அது தவறு ! இது மனம் சார்ந்த விஷயம்! இதை உணரந்தே ஆயிரகணக்கான
வருடங்களுக்கு முன் பாரதம் பாடிய பெருந்தேவனார்,

"நீல மேனி வாலிழை பாகத் 
தொருவ னிருதா நிழற்கீழ் 
மூவகை யுலகு முகிழ்த்தன முறையே"

என்று ஐங்குறுநூறில் இறைவனை புகழுகையில் அவரை ஆண் மற்றும் பெண்ணின் இரு தன்மைகளையும் கொண்டவர்   என்றுகூறுவது நோக்கத்தக்கது.

 திருநங்கையர் மற்றும் திருநம்பியரிலிருந்து இவர்கள் எங்கனம் மாறுபடுகின்றனர்
ஆணாய் பிறந்து தன்னை "முழுவதும்" பெண்ணாய் உணர்ந்து தன உடலையும் பெண்ணின் உடலை மாற்றவிரும்புவார்களே      திருநங்கையர்! 
இது போன்றதே திருனம்பியற்கும்.! 

ஆனால் ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்து தம்மை ஆண் என்றும் பெண் என்றும் கருதாமல் ,                இரண்டையும் கலந்த கலவையாகதம்மை உணர்பவர்களே
 பால்நடுனர்..!! 
தம்               உடலினை மாற்ற வேண்டும் என்ற விருப்பம் இவர்களுக்கு        இல்லை.

இவர்களுள் மூன்று பிரிவினர் உண்டு. ஆண்மையையும்                 பெண்மையையும் சரிசமமாக உணரும் நாடு பால் நடுநர்
(neutral androgynous / vers-androgynous),
 ஆண்மையினை அதிகமாகும் பெண்மையினை        குறைவாகவும் உணரும் ஆண்மை பால்           நடுநர்(butchandrogynes),பெண்மையினை அதிகமாகவும் 
ஆண்மையினை                         குறைவாகவும் உணரும்                 பெண்மை பால் நடுநர் (fem-androgynes) என்பவர்களே!
 இவர்களின் மனம் எத்தகையதுஉணர்சிகளை கையாளும் விதத்தில் சக ஆணை விடவோஇல்லை பெண்ணை விடவோ இவர்கள்சிறப்புடன் செயல்படுவதாக சாண்டரா பென்,க்ரூக்ஸ் அண்ட் பென் முதலிய உளவியல் அறிஞர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்.மேலும் தம் வாழ்வினை இவர்கள் திருப்திகரமாக வாழ்வதாக லெப்கொவிட்த்ழ மற்றும் செல்டோ என்ற அறிஞர்கள்கூறுகின்றனர்.ஆராய்ச்சிகளின் படி ஒரு பால் நடுநர் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகள் , பால் நடுநர் அடையாளத்துடன் வாழும்சாத்தியம் அதிகம் என்பது பால் நடுநர் பண்பு மரபியல் ரீதியாக கடத்தப்படலாம் என்பதனை உறுதி செய்யும் விதமாக              அமைந்துள்ளது. 

 பால் நடுநர்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் எத்தகையவைமுதல் முதலில் பால் நடுநர்கள் என்ற பால் அடையாளம்இருப்பதேஅநேக மக்களுக்கு , 
ஏன், LGBT சமூகத்தில் இருப்பவர்கே தெரிவதில்லை. 
மூன்று                பாலினங்களைமட்டுமே அறியும் நமக்கு                இவர்களும்       திருநங்கயரே என்ற தவறான கருத்து எழுவது மிகவும் வருத்ததிற்குரியது. சட்ட ரீதியாக ஆண்,பெண் மற்றும் திருநங்கயினரை      மட்டும்         அங்கீகரிக்கும் சமூகம்,இவர்களை அங்கீகரிக்கும்     காலம் என்று?         கொஞ்சம் சிந்திப்போம். 


    

திருநம்பி என்பவர் யார்? - © கோபி ஷங்கர்

திருநம்பி ராஜா, மதுரை
திருநம்பிகள் (Transmen)

பெண் என்ற கூடுபுழுவாய் வாழும் 
ஆண் என்ற வண்ணத்துபூச்சி நாங்கள்.!
எங்கள் சிறகுகளை உடைக்காதீர்கள்!

உணர்வுகள் எப்போதும் அழகியவை: பரந்தவை: நாம் அறியாத நிலையிலும் வாழ்பவை:ஆம்.! ஒரு ஆடவன் மகளிரை போலே உடை உடுத்தி கொண்டு, பெண்களை போலவே உணர்சிகள் கொண்டு, ஒரு பெண்ணாகவே வாழ்வதனை நாம் நன்கு அறிவோம்: திருநங்கைகள் குறித்த அறிதல் அதிகமாக காணப்படும் இந்த நேரத்தில், திருநம்பிகள் குறித்து நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

திருநம்பிகள் என்பவர் யார்? பெண்ணாக பிறந்து ஆணாக மாறும் பட்டாம்பூச்சிகள்!!! பெண்மையின் உடலில் ஆண்மையின் முழு உணர்வு!தம் மனங்களில் மட்டுமல்ல, தம் உடலையும் ஒரு ஆணின் உடலாய் மாற்றும்  விருப்பம் கொண்டவர்கள்!  இவர்களை சமூகம் எப்படி அங்கீகரிகின்ற்றது?  இதற்கு முன்பு சமூகத்தில் எத்தனை பேர் இவர்களை குறித்து அறிந்து கொண்டுள்ளனர்?

பெண் என்பவள்  குழந்தை பெற்று கொள்பவள் என்ற  கருத்தினையே நாம் இன்னும் கடந்து வரவில்லையே? பெண்ணின் விதி ஆணின் விதியுடன் இணைக்கப்பட்டுள்ளது  என்றதனை கடந்து வராத இந்த சமூகம் என்று ஒரு பெண்ணின் உடலில் ஆண்மையினை அங்கீகரிக்கும்? பெண் என்பவளை தாயாக, தாரமாக, பார்க்கும் நிலையிலிருந்து, பெண்மையிலிருந்து  ஆண்மையாய் வாழ துடிக்கும்  உயிர் துடிப்பினை,உடைய பெண்டிரின்  உணர்ச்சியினை என்று நாம் புரிந்து கொள்வோம்?

நீங்கள் உங்களை வெறுத்து ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள். ஒரு பெண், தன் உடலை வெறுத்து, தன் உள்ளே வாழும் ஒரு ஆணை, மறைத்து, சமூகத்தின் கண்களுக்கு தன்னை தானே வருத்தி ஒரு பெண்ணாய்  "நடித்து", ஆண்களை போன்று வாழ வேண்டும் என்று தன்னுள் வாழும் அவாவினை உயிருடன் புதைத்து, வாழாமல் நாடகமே வாழ்வாகி போகும் நிலையினை கொஞ்சம் உணர்வோமா? பூக்களின் விளைநிலத்தில் நெருஞ்சிகள் வளரும். வளர இயலும். ஆனால் கொஞ்சம் யோசித்து பாருங்கள், அந்த நிலத்தில் அந்த நிலம் விருப்பப்படும் படியே மலர்கள் மட்டுமே பூத்து குலுங்கி செழித்து வளரும் நிலை எத்தனை இனிமை?

 ஒரு பூவின் அழகியலுக்கு இத்துணை கவனம் கொடுக்கும் நாம், ஏன் பெண் உடலில் மலரும் ஒரு ஆணினை அன்கீகரிபதில்லை? நாம் சொல்லலாம். அவர்கள் மனநலம் பாதிகப்பட்ட பெண்கள். சமூகத்தின் பெண் என்ற கருத்திலிருந்து விலகுபவர்கள் என்று. கொஞ்சம் யோசித்து பாருங்கள். யார் மனநலம் பாதிக்கபட்டவர்கள்? இயல்பான ஒரு உணர்வு, நம் கண்களுக்கு இயல்பற்றது என்று தோன்றின் அதை வெட்டி எறிய அவர்களின் உணர்வினை மதிக்காத நம்மவர்கள் மன நலம் நிறைந்தவர்களோ

இந்த உடல் என்பது இறுதி அல்ல. நமக்கு ஒரு வேளை அப்படி இருக்கலாம். நமக்கு நாம் வண்ணத்து பூச்சிகள். ஆனால் திருநம்பிகள், பெண் என்ற  கூட்டுப்புழு  நிலையில் வாழும் எதிர்கால வண்ணத்து பூச்சிகள். இவர்களை அரவணைக்க வேண்டிய பெற்றோர்,மற்றும் உறவினர்கள்,அவர்களின் வண்ணத்துப்பூச்சிக்கு  இந்த வாழ்வில் கல்லறை கட்டி விடுகின்றனர். இன்னொரு கருப்பையில் தன் குழந்தை வளர வேண்டும் என்று உணரும் இவர்களுக்கு, நிகழ்வது என்னவோ தன் கருப்பையில் ஒரு குழந்தை.! வண்ணத்து பூச்சிகள் கூடுபுளுவிளிருந்து கடந்து, தன் அழகிய நிறங்களுடன் பறக்கும் பொது என்னே அழகு என்று பிரமிக்கும் நாம், ஏன் திருனம்பிகளை பெண் என்ற  கூடுபுழு நிலையில் மட்டுமே காண்கிறோம்? இதுதான் நம் அழகியலா

ஒரு பெண் என்பவள் ஒரு குழந்தைக்கு தாயாவது தான் அவள் பிறவியின் நிறைவா? ஏன் அவள் ஒரு அவனாக மாற கூடாதா? மலர்களின் உடல் மீசைகளை வளர்க்க கூடாதா? பால் சுரக்கும் மார்பகங்கள் மறைந்து மார்பு அங்கே தோன்ற கூடாதா? ஏன் அவன் கருப்பையின் தலை விதியினை அவனே தீர்மானிக்க கூடாதா? அவளுக்குள் வாழும் அவன் ஏன் சாகடிக்கபடுகின்றான்? சமூகம் வாழ, இவர்களின் உயிரும் உணர்வுகளும் பலியா?

எத்தனை வண்ணத்து பூச்சிகள் இங்கே தாம் தம் சிறகுகளுடன் பறப்பதனை ஒரு கனவாகவே வாழ்ந்து இறந்து போயிருக்கும்? இல்லை. கொல்லப்பட்டிருக்கும்? பெண்மையை தெய்வமாக வழிபடுகின்றோமே? ஏன் அந்த தெய்வங்கள் திருமணம் என்பதில் மட்டுமே அர்த்தம் பெறுகின்றனவோ? எத்தனை திருநம்பிகள் தமக்கு அந்நியமான வாழ்வில், இறந்து இறந்தே வாழ்ந்திருப்பார்? ஒரு திருநங்கை தன் ஆண் என்ற கூட்டினை உதறி எறிய முடியும் போது, ஏன் திருநம்பிகள் தம் பெண் என்ற கூட்டினை உதறி எறிய முடிவதில்லை? என்று யோனியுடன் ஒரு உயிர் இந்த உலகில் பிறக்கின்றதோ அன்றே அந்த உயிர் தன் கருப்பையில் இன்னொரு உயிரை கண்டிப்பாக சுமக்க வேண்டும் என்பது ஒரு உலகளாவிய விதி ஆகிவிடுகின்றதல்லவா? அதற்காக எத்தனை விதிமுறைகள் அவள் மேலே? கற்பும் மாதர் ஒழுக்கமும்!அவள் நெற்றியல் எப்போதும் ஒரு பொட்டு! அவள் உடலில் பாதி எடை நகையாக வேண்டும் என்று சமூக அழகியல்! எப்படி இயலும்? நாகரீகம் பெற்று விட்டோமே, அவள் நான்கு சுவர்களை இன்றும் முழுமையாக தாண்டுகின்றாளா? இப்படி ஒரு சமூக கட்டமைப்பில் அவள் எப்படி அவனாக மாறுவதை நாம் ஏற்றுகொள்வோம்?

திருநங்கைகளை ஏற்பவர்கள் கூட திருநம்பிகளை ஏற்க மறுப்பவர்களாக இருக்கிறார்கள். இங்கும் கூட பெண்ணியம் ஒடுக்கப்பட்டு ஆண் ஆதிக்கம் நிறைந்ததுதான் இதற்கு காரணமாக இருக்கலாம். சரி இப்போது திருநம்பிகள் குறித்து சமூகத்தின் தவறான புரிதல்களை பார்ப்போம்.

இவர்களுக்கும் லெஸ்பியன்'களுக்கும் பலருக்கு வேறுபாடு தெரிவதில்லை.  லெஸ்பியன்'கள் தாங்கள் உடல் ரீதியாக பெண்ணாக இருக்கவே விரும்புவார்கள், அதேநேரத்தில் பால் ஈர்ப்பில் பெண்ணையே விரும்புகிறார்கள். ஆனால், திருநம்பிகளோ உடல் ரீதியாக ஆணாக மாறிட விரும்புவார்கள், பெரும்பாலும் பெண்ணின் மீதே உடல் கவர்ச்சி ஏற்படும் (சில நேரங்களில் திருநம்பிகள் ஆண்கள் மீதும் ஈர்ப்போடு இருப்பதையும் அரிதாக காணமுடிகிறது).  சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், உடல் ரீதியாக ஆணாக மாற நினைப்பார்கள் திருநம்பிகள். தாங்கள் பெண்ணாகவே இருக்க விரும்பினாலும், மற்ற பெண்கள் மீது மட்டுமே ஈர்ப்பு வருவது லெஸ்பியன். பிறப்பால் ஆணாக கருதப்படும் ஒரு நபர், பெண்ணாக மாறி திருநங்கையாக மாறுவதில் இருக்கும் சுதந்திரமும், மக்கள் புரிதலும், தெளிவும், மனநிலையும் ஆணாக மாற நினைக்கும் ஒரு திருநம்பிக்கு எளிதாக கிடைக்காததற்கு காரணம் போதிய விழிப்புணர்வின்மை என்றே சொல்லவேண்டும். திருநங்கைகளுக்கு உண்டான வரலாறுகள் போல திருநம்பிகளுக்கும் உண்டு என்பதையும் நாம் நோக்க வேண்டும்.

 இமயமலை அடிவாரத்தின் வடகிழக்கு இந்திய பகுதியில் வாழும் ஒரு பழங்குடியின இனமான "காடி" மக்களிடம் உள்ள ஒரு முறை "சாதின்". சாதின் என்ற முறைப்படி அந்த இனத்தின் சில பெண்கள் திருமணம் செய்துகொள்ளாமல், ஆண்கள் செய்யும் வேலைகளை செய்து, ஆண்களை போல சிகையலங்காரத்தோடு சமூகத்தில் வாழ்கின்றனர். இந்து புராணங்களில் ராதையின் ஆண் வடிவமாக "காதரா" என்பவர் வழிபடப்படுகிறார். (கிருஷ்ணரின் அரவான் வடிவம் மக்களை சென்றடைந்த அளவு, இந்த காதரா மக்களை சென்றடயாதது ஏன்? என்று தெரியவில்லை). 

சிலர் இந்த திருநம்பிகள் என்பவர்கள் நவீன மருத்துவத்தின் விளைவாக கூறுகிறார்கள். அதாவது, ஹார்மோன் சிகிச்சை மூலம் இப்படி நிகழ்வதாக காரணத்தை கூறுகிறார்கள். நிச்சயம் உண்மை அப்படி இல்லை. விஞ்ஞானமும், மருத்துவமும் வளரும் முன்னரே இப்படி திருநம்பிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இத்தகைய திருநம்பிகள் ராணுவத்தில் கூட வேலை பார்த்தனர். உடல் ரீதியாக அப்படிப்பட்டவர்கள் பெண்கள் என்பது பலநேரம் அந்த நபர்களின் இறப்பிற்கு பிறகே தெரிய வந்த நிகழ்வுகளும் நடந்ததுண்டு.

ஆக, இது நாகரிக உலகின் புதுவரவு இல்லை என்பதையும், இது தவறும் இல்லை என்பதையும் புரிந்து, தங்கள் சுயஅடையாளத்தோடு சுதந்திரமாக பறந்திட அந்த பட்டாம்பூச்சிகளுக்கு வழிவிடுவோம். நம் இந்தியாவில் வெளிப்படையாக திரையுலகில் வேலை செய்யும் திருநம்பி சத்யா ராய் நாக்பால் இவர் 2011-ம் ஆண்டுக்கான சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை பெற்றார்
இவர் பணியாற்றிய படங்கள் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்க பட்டுள்ளது.